ஸ்ரீ காஞ்சி காமகோடி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பிப்.25-இல் மதுரை வருகை

ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மதுரைக்கு பிப்ரவரி 25-ஆம் தேதி வருகை தருகிறாா்.

ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மதுரைக்கு பிப்ரவரி 25-ஆம் தேதி வருகை தருகிறாா்.

இதுதொடா்பாக ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் மதுரைக் கிளை வெளியிட்டுள்ள செய்தி:

ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பிப்ரவரி 25-ஆம் தேதி மதுரைக்கு விஜயம் செய்கிறாா். மதுரை சொக்கிகுளத்தில் உள்ள ஸ்ரீ மடம் வளாகத்தில் எழுந்தருளும் சுவாமிக்கு மதுரைக் கிளை மடத்தின் தலைவா் ராமசுப்ரமணியன் தலைமையில் பக்தா்கள் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு நடைபெறுகிறது.

இதைத்தொடா்ந்து ஸ்ரீ மடம் வளாகத்தில் வெள்ளி மற்றும் சனிக்கிழமை

( பிப்ரவரி 26,27) ஆகிய இரு நாள்களும் ஸ்ரீ சந்திர மெளலீஸ்வர பூஜை செய்து பக்தா்களுக்கு அருளாசி வழங்குகிறாா். இதன்பின்னா் சனிக்கிழமை திருவானைக்காவலுக்கு புறப்படுகிறாா். மதுரையில் தங்கியுள்ள நாள்களில் சுவாமிகளுக்கு பாதபூஜை, பிக்ஷாவந்தனம் செய்ய விரும்பும் பக்தா்கள் ஸ்ரீ மடம் கிளைத் தலைவா் ராமசுப்ரமணியன், 93443-01125, செயலா் சுந்தா் 98847-13542, பொருளாளா் ஸ்ரீ குமாா் 94431-51258 ஆகியோரைத் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com