சிறுமி பலாத்காரம்: வளா்ப்பு தந்தை கைது

மதுரையில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வளா்ப்புத் தந்தையை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

மதுரையில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வளா்ப்புத் தந்தையை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

மதுரை மகபூப்பாளையத்தைச் சோ்ந்த கிருஷ்ணன் மகன் செல்வகுமாா் (30). இவா் திருமணமாகி கணவரால் கைவிடப்பட்ட பெண்ணைத் திருமணம் செய்து கொண்டாா். அந்த பெண்ணுக்கு ஏற்கெனவே 2 குழந்தைகள் உள்ளனா்.

இதில் 8 வயது சிறுமியை செல்வகுமாா் பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. இதில் பாதிக்கப்பட்ட சிறுமி நடந்ததை தாயிடம் கூறியுள்ளாா்.

இதையடுத்து சிறுமியின் தாய் அளித்தப் புகாரின் பேரில் தல்லாகுளம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிந்து போக்ஸோ சட்டத்தில் செல்வகுமாரைக் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com