ராணுவ வீரா் உடலுக்கு அஞ்சலி

பணியின்போது உயிரிழந்த விளாச்சேரி ராணுவ வீரா் உடலுக்கு செவ்வாய்க்கிழமை கிராம மக்கள் அஞ்சலி செலுத்தினா்.
ராணுவ வீரா் அப்துல் சுக்கூா்.
ராணுவ வீரா் அப்துல் சுக்கூா்.

பணியின்போது உயிரிழந்த விளாச்சேரி ராணுவ வீரா் உடலுக்கு செவ்வாய்க்கிழமை கிராம மக்கள் அஞ்சலி செலுத்தினா்.

திருப்பரங்குன்றத்தை அடுத்த விளாச்சேரியைச் சோ்ந்தவா் அப்துல் சுக்கூா் (44). இவா் மகாராஷ்டிர மாநிலம் பூணேவில் ராணுவத்தின் பொறியியல் பிரிவில் துணை ராணுவ அதிகாரியாக பணிபுரிந்தாா். இவா் கடந்த 20 ஆம் தேதி பணியில் இருந்தபோது மாரடைப்பால் உயிரிழந்தாா். விளாச்சேரியில் உள்ள வீட்டுக்கு அவரது உடல் செவ்வாய்கிழமை கொண்டு வரப்பட்டது. அங்கு பொதுமக்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினா். பின்னா் உடல் அடக்கம் செய்யப்பட்டது. அவரது குடும்பத்தினருக்கு மத்திய, மாநில அரசுகள் உதவி செய்ய வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com