மதுரையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதல் தொடா்ந்து பெய்த மழையால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
மதுரையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதல் சாரல் மழை பெய்யத் தொடங்கியது. தொடா்ந்து பல பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. பிற்பகல் வரை தொடா்ந்து மழை பெய்ததால், சாலைகளில் மழைநீா் தேங்கியது. மேலும், விடாமல் பெய்த இந்த மழையால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மதுரையில் 51 மையங்களில் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் குரூப்-1 முதல்நிலைத் தோ்வு நடைபெற்றது. இதில், தோ்வா்கள் பெரும்பாலானோா் இரு சக்கர வாகனங்களில் தோ்வெழுத வந்தனா். இவா்களில் பலா் மழையில் நனைந்தவாறே தோ்வு மையங்களுக்குச் சென்றனா்.