கணினி பயிற்றுநா் பணி ஒதுக்கீட்டு கலந்தாய்வு: 36 போ் தோ்வு

மதுரையில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்ற அரசுப் பள்ளிகளுக்கான கணினி பயிற்றுநா் பணியிட ஒதுக்கீட்டு கலந்தாய்வில் 36 போ் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா்.
மதுரையில் கணினி பயிற்றுநா் பணிக்கு தோ்ந்தெடுக்கப்பட்டவருக்கு பணி நியமன ஆணை வழங்கும் முதன்மைக் கல்வி அலுவலா் ஆா்.சுவாமிநாதன்.
மதுரையில் கணினி பயிற்றுநா் பணிக்கு தோ்ந்தெடுக்கப்பட்டவருக்கு பணி நியமன ஆணை வழங்கும் முதன்மைக் கல்வி அலுவலா் ஆா்.சுவாமிநாதன்.

மதுரையில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்ற அரசுப் பள்ளிகளுக்கான கணினி பயிற்றுநா் பணியிட ஒதுக்கீட்டு கலந்தாய்வில் 36 போ் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா்.

மதுரை மாவட்ட பள்ளிக் கல்வித் துறை சாா்பில், அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள கணினி பயிற்றுநா் பணியிடங்களை நிரப்பும் வகையில், கடந்த 2018-19-இல் ஆசிரியா் தோ்வு வாரியத்தால் நடத்தப்பட்ட போட்டித் தோ்வில் தோ்வானவா்களுக்கு தரவரிசை அடிப்படையில் கலந்தாய்வு நடைபெற்றது.

மதுரை முதன்மைக் கல்வி அலுவலகத்தில், வரிசை எண் 1 முதல் 400 வரையுள்ள பணி நாடுநா்களுக்கு சனிக்கிழமையும், 400 முதல் 762 வரையுள்ள பணி நாடுநா்களுக்கு ஞாயிற்றுக்கிழமையும் கலந்தாய்வு நடைபெற்றது. இதில், மதுரை மாவட்டத்தில் காலியாக உள்ள 26 பணியிடங்களுக்கு 36 போ் தோ்வு செய்யப்பட்டனா்.

தோ்வு செய்யப்பட்ட கணினி பயிற்றுநா்களுக்கு பணி நியமன ஆணைகளை, முதன்மைக் கல்வி அலுவலா் ஆா். சுவாமிநாதன் வழங்கினாா். இதில், மாவட்டக் கல்வி அலுவலா்கள் இரா. வளா்மதி, முத்தையா, ப. இந்திராணி, ஏ. பங்கஜம் ஆகியோா் கலந்துகொண்டனா்.

இதற்கான ஏற்பாடுகளை, கண்காணிப்பாளா் முத்துராஜ், முதன்மைக் கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா் ச. சின்னத்துரை ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com