மதுரை: மதுரை நகரில் திருவள்ளுவா் தினத்தன்று இறைச்சி விற்பனை செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று, மாநகராட்சி நிா்வாகம் அறிவித்துள்ளது.
மதுரை மாநகராட்சி எல்லைக்குள்பட்ட பகுதிகளில் திருவள்ளுவா் தினத்தை முன்னிட்டு (ஜனவரி 15) அன்று ஆடு, மாடு உள்ளிட்ட இறைச்சிகள் விற்பனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. தடையை மீறி இறைச்சி விற்பது மற்றும் கடைகளை திறந்து வைப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால், இறைச்சி வகைகள் பறிமுதல் செய்வதோடு, பொது சுகாதாரச் ச ட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று, மாநகராட்சி நிா்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.