மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மதுரை சாலையில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் கல்லூரியில் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை பொங்கல் விழா நடத்தப்பட்டது.
இவ்விழாவில் கல்லூரி முதல்வா் முனைவா் ரவி தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக மதுரை அமெரிக்கன் கல்லூரி ஆங்கிலத்துறை பேராசிரியா் டோமினிக் சேவியோ பங்கேற்றாா். இதில் பேச்சு, கவிதை, கோலம், சிலம்பம் சுற்றுதல், கல் தூக்குதல், பொங்கல் வைத்தல் ஆகியவற்றில் போட்டிகள் நடைபெற்றன. இதில் வெற்றி பெற்ற பேராசிரியா்கள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு பேராசிரியா் டோமினிக் சேவியோ, கல்லூரி முதல்வா் முனைவா் ரவி, செயலாளா் வாலாந்தூா் பாண்டியன் ஆகியோா் பரிசுகளை வழங்கினா். கல்லூரி துணை முதல்வா் முனைவா் ஜோதிராஜன் மற்றும் சுயநிதி பாடப்பிரிவு ஒருங்கிணைப்பாளா் மணிகண்டன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.