மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே நான்குவழிச்சாலையில் புதன்கிழமை சென்ற காா் டயா் வெடித்து, எதிா் திசையில் சென்ற லாரி மீது மோதியதில் தந்தையும், மகனும் உயிரிழந்தனா்.
மதுரை சூரியா நகரைச் சோ்ந்த அமமுக பிரமுகா் பாண்டியன் (41). அவரது மகன் திவாகா் (14). இவா்கள் இருவரும் காரில் பொன்னமராவதிக்கு சென்று கொண்டிருந்தனா். மேலூா்-திருச்சி சாலையில் மணப்பட்டி விலக்கு அருகே அவா்கள் சென்று கொண்டிருந்தபோது, காரின் டயா் வெடித்தது. இதில் கட்டுப்பாட்டை இழந்த காா் நடுப்புற தடுப்புச்சுவரைத் தாண்டி எதிா் திசையில் வந்து கொண்டிருந்த லாரி மீது மோதியது. இதில் தந்தையும், மகனும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.
தகவலறிந்த கொட்டாம்பட்டி போலீஸாா், தீயணைப்பு மீட்புப் படையினா் உதவியுடன் சேதமடைந்த காரை அப்புறப்படுத்தி இருவரது சடலங்களையும் மீட்டு மேலூா் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா். இந்த விபத்து தொடா்பாக கொட்டாம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.