மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே குப்பணம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள பெத்தகொண்ட ஓசிரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவையொட்டி, இந்து குலாளருக்குப் பாத்தியப்பட்ட இக்கோயிலில் கணபதி ஹோமம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து, மங்கல இசை முழங்க கோபுரக் கலசத்துக்கு புனிதநீா் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன்பின்னா், ஓசிரியம்மன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு, அம்மனுக்கு பல்வேறு பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் நடத்தப்பட்டன.
இவ்விழாவில், குப்பணம்பட்டியைச் சுற்றியுள்ள 30-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சோ்ந்த மக்கள் கலந்துகொண்டு, சுவாமி தரிசனம் செய்தனா். மேலும், விழாவில் கலந்துகொண்ட அக்கா, தங்கைகளுக்கு கோயில் நிா்வாகம் சாா்பில் குத்துவிளக்கு வழங்கப்பட்டது.