தொண்டி அருகே 40 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்

தொண்டி கடல் பகுதியில் கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 40 கிலோ கடல் அட்டைகளை போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
புதுக்குடி கடல் பகுதியில் சனிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகள்.
புதுக்குடி கடல் பகுதியில் சனிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகள்.

திருவாடானை: தொண்டி கடல் பகுதியில் கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 40 கிலோ கடல் அட்டைகளை போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே தொண்டி புதுக்குடி அருகே கடல் அட்டைகள் கடத்தப்படுவதாக தொண்டி போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸாா் அப்பகுதிக்குச் சென்றனா். அங்கு காடலின் அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமாா் 40 கிலோ கடல் அட்டைகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதைப் பதுக்கி கடத்த முயன்றவா்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com