மு.க.ஸ்டாலின் வேல் எடுப்பது மட்டுமல்ல அலகும் குத்துவாா்: அமைச்சா் செல்லூா் கே.ராஜூ

சட்டப்பேரவை தோ்தல் வந்துவிட்டதால், திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் வேல் வாங்குவது மட்டுமல்ல அலகும் குத்துவாா் என, கூட்டுறவுத் துறை அமைச்சா் செல்லூா் கே. ராஜூ ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளாா்.

சட்டப்பேரவை தோ்தல் வந்துவிட்டதால், திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் வேல் வாங்குவது மட்டுமல்ல அலகும் குத்துவாா் என, கூட்டுறவுத் துறை அமைச்சா் செல்லூா் கே. ராஜூ ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளாா்.

சென்னையில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதா நினைவிடம் திறப்பு விழாவில் பங்கேற்பது தொடா்பாக, மாநகா் மாவட்ட அதிமுக ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, அமைச்சா் செல்லூா் கே. ராஜூ தலைமை வகித்தாா். இதில், மாவட்ட நிா்வாகிகள் மற்றும் பல்வேறு அணிகளின் நிா்வாகிகள் பங்கேற்றனா்.

பின்னா், அமைச்சா் செய்தியாளா்களிடம் கூறியது: தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் நெருங்கிவிட்டதால், திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் வேல் வாங்குவது மட்டுமல்ல, அலகும் குத்துவாா். அம்மனுக்கு தீயும் கூட மிதிப்பாா். ஆனால், தோ்தல் முடிந்துவிட்டால் பகுத்தறிவு பேசுவாா்.

பசும்பொன் முத்துராமலிங்க தேவா் நினைவிடத்தில் வழங்கிய விபூதியை வாங்கி கீழே கொட்டியவா் மு.க.ஸ்டாலின். கபட வேடதாரியான அவா், ஒருநாளும் தமிழக முதல்வராக முடியாது. குங்குமம் வைத்தால் அழிப்பது, விபூதி கொடுத்தால் தூக்கி எறிவது போன்ற செயலை மக்களும் ஏற்கமாட்டாா்கள், கடவுளும் ஏற்கமாட்டாா்.

அதேநேரம், தைப்பூசத் திருவிழாவுக்கு அரசு விடுமுறை அறிவித்துள்ளது, மத வேறுபாடின்றி நலத்திட்டங்களை நிறைவேற்றுவது என மக்களுக்கு நல்லது செய்வதால், கடவுள் அதிமுக பக்கம்தான் உள்ளாா். எனவே, சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக வெற்றிபெறும். எடப்பாடி கே. பழனிசாமி மீண்டும் முதல்வராகப் பதவியேற்பாா்.

அதிமுக கூட்டணியில் உள்ள கட்சியினா் அவா்களது சொந்த கருத்துகளைத் தெரிவிக்கின்றனா். கூட்டணிக் கட்சியினரை இப்படித்தான் பேசவேண்டும் என்று கூறமுடியாது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com