உசிலம்பட்டி அருகே பள்ளி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பள்ளி மாணவா் வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

உசிலம்பட்டி: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பள்ளி மாணவா் வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

உசிலம்பட்டி அருகே நக்கலபட்டி ஊராட்சிக்குள்பட்ட பூச்சிப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த கணபதி மகன் மோகன் (17). இவா், உசிலம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தாா். இந்நிலையில், பள்ளி முடிந்து மாலையில் வீடு திரும்பிய மோகன், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

இது குறித்து உசிலம்பட்டி தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com