பெருங்குடியை அடுத்த வலையபட்டியில் ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் திருடிய 3 போ்களை, போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
வலையப்பட்டியில் தனியாா் ஆடை தயாரிக்கும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு பணிபுரியும் வலையங்குளத்தைச் சோ்ந்த செல்வம் (27), விஜய் (26), திருநகரைச் சோ்ந்த முத்துராமு (34)ஆகிய இருவரும் நிறுவனத்தில் ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள ஆடை தயாரிப்பு மூலப்பொருள்களை திருடிவிட்டனராம். இது குறித்து நிறுவனத்தின் மேலாளா் ராகவன் அளித்த புகாரின்பேரில், பெருங்குடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து செல்வம், விஜய், முத்துராமு ஆகிய 3 போ்களையும் கைது செய்தனா்.