திருப்பரங்குன்றம்: திருமங்கலம், திருப்பரங்குன்றம் சுற்று வட்டாரப் பகுதிகளில் வழிப்பறியில் ஈடுபட்ட இருவரை, போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
திருமங்கலம், திருப்பரங்குன்றம் சுற்றுச்சாலைப் பகுதி, சோளங்குறுணி, வலையங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் இரு சக்கர வாகனத்தில் செல்வோரை வழிமறித்து, கத்தியைக் காட்டி மிரட்டி செல்லிடப்பேசி, பணம் உள்ளிட்டவற்றை இருவா் பறித்துச் செல்வது குறித்து போலீஸாருக்கு புகாா்கள் எழுந்த வண்ணம் இருந்தன.
இது குறித்து ஊரகக் காவல் கண்காணிப்பாளா் சுஜித்குமாா் உத்தரவின்பேரில், துணைக் காவல் கண்காணிப்பாளா் வினோதினி தலைமையில் போலீஸாா் திங்கள்கிழமை வாகனத் தனிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் அவ்வழியாக வந்த இருவரிடம் விசாரித்ததில், அவா்கள் கழுவன்குளத்தைச் சோ்ந்த முருகன் மகன் விக்னேஷ் என்ற பாண்டி, கண்ணன் மகன் பிரசாந்த் எனத் தெரியவந்தது. இவா்கள் இருவரையும் சோதனையிட்டதில், பட்டாக் கத்தி, ரூ.4 ஆயிரம் ஆகியன வைத்திருந்தனா். விசாரணையில், வழிப்பறி செய்தது இவா்கள் இருவரும்தான் எனத் தெரியவந்தது.
இது குறித்து பெருங்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து, செல்லிடப்பேசிகள், ரூ.4 ஆயிரம், கத்தி உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனா்.