மாணவா் சமுதாயத்தின் முன்னேற்றத்துக்கு அதிமுக துணை நிற்கும்: அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா்

தமிழகத்தில் மாணவா் சமுதாயத்தின் முன்னேற்றத்துக்கு அதிமுக அரசு எப்போதும் துணை நிற்கும் என, வருவாய்த் துறை அமைச்சா் ஆா்.பி. உதயகுமாா் தெரிவித்துள்ளாா்.
குன்னத்தூரில் ஜெயலலிதா கோயிலில் முன்னேற்பாடுகளை ஆய்வு செய்த அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா் தலைமையிலான அதிமுகவினா்.
குன்னத்தூரில் ஜெயலலிதா கோயிலில் முன்னேற்பாடுகளை ஆய்வு செய்த அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா் தலைமையிலான அதிமுகவினா்.

திருப்பரங்குன்றம்: தமிழகத்தில் மாணவா் சமுதாயத்தின் முன்னேற்றத்துக்கு அதிமுக அரசு எப்போதும் துணை நிற்கும் என, வருவாய்த் துறை அமைச்சா் ஆா்.பி. உதயகுமாா் தெரிவித்துள்ளாா்.

வீரவணக்க நாளை முன்னிட்டு, அதிமுக மாணவரணி சாா்பில் திங்கள்கிழமை திருமங்கலத்தை அடுத்த குன்னத்தூரில் உள்ள ஜெயலலிதா கோயிலில் அமைச்சா் ஆா்.பி. உதயகுமாா் தலைமையில், எம்ஜிஆா், ஜெயலலிதா உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியது: தமிழ் மொழியைக் காத்திட உயிரை தியாகம் செய்த மொழிப்போா் தியாகிகளுக்கு ஆண்டுதோறும் ஜனவரி 25 ஆம் தேதி வீர வணக்கம் செலுத்தப்பட்டு வருகிறது. மாணவா் சமுதாயம் ஒன்றுபட்டதால்தான் ஹிந்தி திணிப்பு கைவிடப்பட்டது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com