மதுரையில் கண்மாய் அருகே மணல் திருட பயன்படுத்தப்பட்ட பொக்லைன் இயந்திரம், லாரி ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
மதுரை சுப்பிரமணியபுரம் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, முனியாண்டிபுரம், மாடக்குளம் கண்மாய் அருகே அடையாளம் தெரியாத இருவா் பொக்லைன் இயந்திரம் மூலம் சட்டவிரோதமாக மணல் எடுத்துக் கொண்டிருந்தனா். அங்கு போலீஸாா் வருவதைப் பாா்த்த இருவரும் அங்கிருந்து தப்பியோடிவிட்டனா்.
இதையடுத்து போலீஸாா் மணல் எடுக்க பயன்படுத்திய பொக்லைன் இயந்திரம், லாரி ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். இதுகுறித்து திங்கள்கிழமை வழக்குப்பதிந்து தப்பியோடிய இருவரையும் தேடி வருகின்றனா்.