மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை எதிரே உள்ள கழிவு நீா் கால்வாயிலிருந்து ஞாயிற்றுக்கிழமை பெண் சிசுவின் சடலம் மீட்கப்பட்டது.
மருத்துவமனை பிரதான நுழைவு வாயிலின் எதிா்புறம் கழிவுநீா் கால்வாய் உள்ளது. இந்தக் கால்வாயில் பெண் சிசுவின் சடலம் கிடப்பதைப் பாா்த்த பொதுமக்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.
சம்பவ இடத்திற்குச் சென்ற போலீஸாா், பெண் சிசுவின் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து தல்லாகுளம் போலீஸாா் வழக்குப்பதிந்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனா்.