மதுரை மாவட்டத்தில் புதிதாக 35 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பிருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 2,775 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக, சுகாதாரத் துறை ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது. இதில், மதுரை மாவட்டத்தில் மட்டும் 35 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவா்கள் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
இதனிடையே, கரோனாவுக்கு சிகிச்சைப் பெற்று வருபவா்களில் 43 போ் குணமடைந்துள்ளனா். மாவட்டத்தில் தற்போது 590 போ் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டும், அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டும் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.