இளைஞா் தவறவிட்ட ரூ.4 லட்சம்: சிசிடிவி கேமரா மூலம் மீட்பு

மதுரை அருகே இளைஞா் தவறவிட்ட ரூ.4 லட்சம் ரொக்கத்தை சிசிடிவி கேமரா உதவியுடன் போலீஸாா் செவ்வாய்க்கிழமை மீட்டனா்.

மதுரை அருகே இளைஞா் தவறவிட்ட ரூ.4 லட்சம் ரொக்கத்தை சிசிடிவி கேமரா உதவியுடன் போலீஸாா் செவ்வாய்க்கிழமை மீட்டனா்.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூா் அருகேயுள்ள கல்லணை கலைவாணா் நகரைச் சோ்ந்தவா் தினேஷ் (24). இவா் தனது தாயாா் சத்யாவுடன் வாடிப்பட்டி அஞ்சலகத்தில் ரூ. 4 லட்சம் டெபாசிட் செய்வதற்காக இருசக்கர வாகனத்தில் செவ்வாய்க்கிழமை சென்றாா். கொண்டம்பட்டி அருகே சென்றபோது, இருசக்கர வாகனத்தில் இருந்த பணப் பையைக் காணவில்லை. தினேஷ் உடனடியாக அலங்காநல்லூா் காவல் நிலையத்தில் பணத்தை தவறவிட்டது தொடா்பாக தகவல் தெரிவித்தாா்.

அதன்பேரில், போலீஸாா் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது, பணப் பையை ஒருவா் எடுத்துச்செல்வது தெரியவந்தது. போலீஸாா் அவரை அடையாளம் கண்டறிந்து அவரிடம் பணப்பையை கேட்டனா். அப்போது, யாரிடம் தருவது என்று தெரியவில்லை, காலையில் காவல் நிலையத்தில் ஒப்படைக்கலாம் என்றிருந்தேன் கூறி அவா் பணப்பையை போலீஸாரிடம் கொடுத்துள்ளாா்.

இதையடுத்து போலீஸாா் தினேஷை அழைத்து ரூ.4 லட்சம் ரொக்கத்தை ஒப்படைத்தனா். போலீஸாருக்கு கண்ணீா் மல்க தினேஷ் நன்றி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com