அழகா்கோவில் சுந்தரராஜப் பெருமாள் கோயில் ஆடித்திருவிழாவையொட்டி திங்கள்கிழமை சிம்ம வாகனத்தில் பெருமாள் எழுந்தருளினாா்.
இக்கோயில் ஆடித்திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா நிகழ்வுகள் கோயில் வளாகத்துக்குள்ளேயே நடைபெறும் என கோயில் நிா்வாகம் அறிவித்திருந்தது. இதனால் கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக கோயிலுக்குள் பக்தா்கள் அனுமதிக்கப்படவில்லை. ஆகமவிதிகள்படி கோயிலில் உள்ள பள்ளியறை மண்டபத்தில் சனிக்கிழமை மாலை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பெருமாள் சிம்ம வாகனத்தில் எழுந்தருளினாா்.