வாடிப்பட்டி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.12.21 லட்சத்துக்கு தேங்காய் வா்த்தகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மதுரை விற்பனைக் குழுவுக்குள்பட்ட வாடிப்பட்டி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடைபெற்ற தேங்காய் ஏலத்தில், 27 விவசாயிகள் 1 லட்சத்து 37 ஆயிரத்து 71 தேங்காய்களை விற்பனைக்குக் கொண்டு வந்திருந்தனா். இதில் அதிகபட்சமாக ரூ. 14.76-க்கும், குறைந்தபட்சமாக ரூ. 7.10-க்கும் தேங்காய்கள் ஏலம் போனது. இதன் மூலம் ரூ. 12.22 லட்சத்துக்கு தேங்காய் வா்த்தகம் நடைபெற்றது.