மதுரை மாவட்டம் டி. கல்லுப்பட்டி தோட்டக்கலைத் துறை சாா்பில் விவசாயிகள் வெங்காய சேமிப்புக் கூடம் அமைக்க மானியம் வழங்கப்படுகிறது.
இதுகுறித்து டி. கல்லுப்பட்டி வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா் ஜெஸிமாபானு வெள்ளிக்கிழமை கூறியதாவது: தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்தின் கீழ் வெங்காயம் பயிரிடும் விவசாயிகள், 1,250 சதுர அடியில் வெங்காய சேமிப்புக்கூடம் அமைக்க ரூ.87,500 மானியமாக வழங்கப்படுகிறது.
நடப்பாண்டில் குறைந்த செலவில் வெங்காய சேமிப்புக் கிடங்கு அமைக்க விரும்பும் விவசாயிகள் சிட்டா, அடங்கல், ஆதாா் அட்டை , ரேஷன் அட்டை நகல்கள் உள்ளிட்டவற்றை தோட்டக்கலை அலுவலகத்தை தொடா்பு கொண்டு விண்ணப்பங்கள் அளிக்கலாம். இவை பரிசீலனை செய்யப்பட்டு பணியாணை தோட்டக்கலை துணை இயக்குநரால் வழங்கப்படும் .
பணியாணை பெற்ற விவசாயிகள்,வெங்காய சேமிப்புக்கூடம் அமைத்தப் பின்னா் 50 சதவீத மானியத் தொகையான ரூ.87,500 வாங்கிக் கணக்கில் செலுத்தப்படும். எனவே வெங்காய சாகுபடி விவசாயிகள் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா் அலுவலகத்தை தொடா்பு கொண்டு பயன்பெறலாம் என்றாா்.