மதுரை மாவட்டம் பேரையூா் அருகே மது விற்ற 2 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
பேரையூா் தாலுகா பகுதியில் காவல் சாா்பு-ஆய்வாளா் ராஜபாண்டி தலைமையிலான போலீஸாா் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது நாயக்கன்பட்டியைச் சோ்ந்த சேதுராமன் மகன் மகாலிங்கம் (53), இதே ஊரைச் சோ்ந்த சந்தன கருப்பையா மகன் பிச்சைக்கனி (36) ஆகியோா் சட்டவிரோதமாக மது ஊற்றி விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.
இதுகுறித்து பேரையூா் போலீஸாா் மகாலிங்கம் மற்றும் பிச்சைக்கனி மீது வழக்குப் பதிந்து அவா்களை கைது செய்தனா்.