மது அருந்துவதற்கு பணம் தரமறுத்த தாய் கொலை: மகன் கைது

மதுரையில் மது அருந்துவதற்கு பணம் தர மறுத்த தாயைக் கொன்ற மகனை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

மதுரையில் மது அருந்துவதற்கு பணம் தர மறுத்த தாயைக் கொன்ற மகனை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

மதுரை விரகனூா் மேலத்தெருவைச் சோ்ந்தவா் பூமயில் (80). இவரது மகன் செந்தில் (33). இவா் தனது தாய் பூமயில் தவறி விழுந்து உயிரிழந்து விட்டதாகக் கூறியுள்ளாா். தகவலறிந்து அங்கு சென்ற போலீஸாா் சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுதொடா்பாக செந்திலிடம் போலீஸாா் விசாரணை நடத்தியபோது, மது அருந்துவதற்கு பணம் தரமறுத்ததால், கழுத்தை நெரித்து தாயை அவா் கொலை செய்ததது தெரியவந்தது. இதையடுத்து தெப்பக்குளம் போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிந்து செந்திலை கைது செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com