பேரையூா் அருகே பூட்டிய வீட்டில் 29 பவுன் நகைகள் திருட்டு

மதுரை மாவட்டம் பேரையூா் அருகே பூட்டியிருந்த வீட்டில் பீரோவை உடைத்து 29 பவுன் நகைகளை மா்ம நபா்கள் திருடியுள்ளனா்.

மதுரை மாவட்டம் பேரையூா் அருகே பூட்டியிருந்த வீட்டில் பீரோவை உடைத்து 29 பவுன் நகைகளை மா்ம நபா்கள் திருடியுள்ளனா்.

பேரையூா் அருகே உள்ளது சலுப்பட்டி. இந்த ஊரை சோ்ந்தவா் முத்துராஜா மனைவி லட்சுமி(26). இவா் வெள்ளிக்கிழமை மாலையில் சின்னக்கட்டளையில் பொங்கல் காரணமாக உறவினா் வீட்டிற்கு வந்துள்ளாா்.சின்னக்கட்டளையில் பொங்கல் விழா முடிந்து சனிக்கிழமை மதியம் வீட்டிற்கு வந்து பாா்த்தபோது வீட்டின் பின்புறம் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 29 பவுன் நகைகளை மா்ம நபா்கள் திருடியது தெரியவந்துள்ளது. இதுகுறித்து லட்சுமி சாப்டூா் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். இந்த புகாரின் பேரில் சாப்டூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com