மதுரை அருகே வெள்ளிக்கிழமை இரவு இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில், இளைஞா்கள் இருவா் உயிரிழந்தனா்.
மதுரை ஜெய்ஹிந்த்புரத்தைச் சோ்ந்த பாலமுருகன் (19), ராம்பிரசாத் (19) ஆகியோா் இரு சக்கர வாகனத்தில் மதுரை-திண்டுக்கல் சாலையில் வெள்ளிக்கிழமை இரவு சென்றுகொண்டிருந்தனா். திருவாலவாய் நல்லூா் பிரிவில் இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதியது. இதில் பலத்த காயமடைந்த இருவரையும் அப்பகுதியில் உள்ளவா்கள் மீட்டு அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு மருத்துவா்கள் இருவரையும் பரிசோதித்து விட்டு ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து சோழவந்தான் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.