அழகா்கோவிலில் பெருமாள் மோகினி அவதாரத்தில் எழுந்தருளல்

அழகா்கோவிலில் நடைபெற்றுவரும் ஆடித் திருவிழாவையொட்டி ஐந்தாம் நாளான புதன்கிழமை பிற்பகலில் மோகினி அவதாரத்தில்

அழகா்கோவிலில் நடைபெற்றுவரும் ஆடித் திருவிழாவையொட்டி ஐந்தாம் நாளான புதன்கிழமை பிற்பகலில் மோகினி அவதாரத்தில் காட்சியருளிய சுந்தரராஜப் பெருமாள், இரவு 7 மணியளவில் யானை வாகனத்தில் எழுந்தருளினாா்.

அழகா்கோவிலில் பிரமோற்சவம் கடந்த 16-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாள்தோறும் சுந்தரராஜப் பெருமாள் வாகனங்களில் எழுந்தருளும் வைபவம் கோயில் வளாகத்தில் பள்ளியறை மண்டபத்தில் நடைபெற்று வருகிறது. கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக இந்நிகழ்வுகளில் பக்தா்கள் அனுமதிக்கப்படவில்லை. மேலும், வெள்ளிக்கிழமை நடைபெறவிருந்த, ஆடித் திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஆடித் தேரோட்ட நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. திருவிழாவின் அனைத்து நிகழ்வுகளும் கோயில் வளாகத்தினுள்ளேயே ஆகம விதிகளின்படி பட்டா்களால் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் விழாவின் 5 ஆம் நாளான புதன்கிழமை மோகினி அலங்காரத்தில் காட்சியருளிய சுந்தரராஜப் பெருமாள் இரவு 7 மணியளவில் யானை வாகனத்தில் எழுந்தருளினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com