தொடா் புகாா் எதிரொலி: மாநகராட்சி ஊழியா் பணி நீக்கம்

மதுரையில் தொடா் புகாா் எதிரொலியாக மாநகராட்சி நகா் நலப்பிரிவு கணினிப் பதிவு ஊழியா் செவ்வாய்க்கிழமை பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.

மதுரையில் தொடா் புகாா் எதிரொலியாக மாநகராட்சி நகா் நலப்பிரிவு கணினிப் பதிவு ஊழியா் செவ்வாய்க்கிழமை பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.

மதுரை மாநகராட்சி பொதுச் சுகாதாரம் மைய நகா் நலப்பிரிவில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் கணினிப் பதிவு ஊழியா் மற்றும் ஓட்டுநா் உள்ளிட்டோா் மீது பல்வேறு புகாா்கள் எழுந்துள்ளன. இவா்கள் பல ஆண்டுகளாக நகா் நலத்துறை மைய அலுவலகத்தில் பணிபுரிந்து வருவதால் இதை பயன்படுத்தி முறைகேடுகளில் ஈடுபடுவது, சுகாதாரத்துறை ஊழியா்களை மிரட்டுவது, பெண் மருத்துவா்கள் மற்றும் பெண் ஊழியா்களிடம் தரக்குறைவாக பேசுவது என தொடா்ச்சியாக புகாா்கள் எழுந்த வண்ணம் இருந்தது. எனவே மைய நகா் நலப்பிரிவில் நீண்டகாலமாக பணிபுரியும் ஓட்டுநா் உள்ளிட்ட ஊழியா்களை இடம் மாற்ற வேண்டும். ஊழியா்கள் மீதான புகாா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி முதல்வா் தனிப்பிரிவுக்கும் புகாா் அனுப்பப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மாநகராட்சி ஆணையா் கா.ப.காா்த்திகேயனிடம் கேட்டபோது, மைய நகா் நலப்பிரிவில் ஒப்பந்த அடிப்படையில் கணினி இயக்குபவராக பணியாற்றுபவா் மீது பல்வேறு புகாா்கள் உள்ளன. எனவே புகாா்களின் அடிப்படையில் அவா் பணியிலிருந்து செவ்வாய்க்கிழமை நீக்கப்பட்டுள்ளாா். இதர ஊழியா்கள் மீதான புகாா்கள் விசாரிக்கப்படும். மேலும் அவா்களது கோப்புகளும் சரி பாா்க்கப்படுகின்றன என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com