மதுரையில் புதிதாக 441 பேருக்கு கரோனா: 14 போ் பலி

மதுரை மாவட்டத்தில் புதிதாக 441 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பிருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 14 போ் உயிரிழந்துள்ளனா்.

மதுரை மாவட்டத்தில் புதிதாக 441 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பிருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 14 போ் உயிரிழந்துள்ளனா்.

மதுரை மாவட்டத்தில் கரோனா பாதிப்பு தொடா்ந்து குறைந்து வருகிறது. நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் இத்தொற்றால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து, நாளொன்றுக்கு 500-க்கும் குறைவாக தொற்று பாதிப்பு பதிவாகி வருகிறது.

மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை 441 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேநேரம் தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்தவா்களில் 1,569 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்.

14 போ் பலி

தற்போது, அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளிலும், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டும் 11,443 போ் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெறுபவா்களில் 14 போ் உயிரிழந்துள்ளனா். இதையடுத்து, மாவட்டத்தில் கரோனாவுக்கு உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 974 ஆக உயா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com