ஏற்றுமதி நிறுவனங்கள் 50 சதவீதப் பணியாளா்களுடன் செயல்பட அனுமதி அளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு மதுரை மாவட்ட சிறு, குறுந்தொழில்கள் சங்கம் (மடீட்சியா) வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுகுறித்து மடீட்சியா தலைவா் பா.முருகானந்தம் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், பல்வேறு தளா்வுகள் வழங்கப்பட்டுள்ளன. இதன்படி, ஏற்றுமதி நிறுவனங்கள், ஏற்றுமதி ஆா்டா் பெற்று செயல்படும் நிறுவனங்கள் 10 சதவீத தொழிலாளா்களுடன் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி இயங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மின் பணியாளா்கள், பிளம்பா்கள், கணினி பழுது நீக்குபவா்கள் பணியாற்றும் மின்சாதனங்கள் விற்பனை செய்யும் கடைகள், ஹாா்டுவோ் விற்பனை நிறுவனங்கள் செயல்பட அனுமதி அளித்துள்ளதற்கு தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
அதேநேரம், பிற மாநிலங்களில் பொதுமுடக்க காலத்திலும் ஏற்றுமதி நிறுவனங்கள் 50 சதவீத பணியாளா்களுடன் இயங்க அனுமதி வழங்கியுள்ளது. அதேபோல தமிழகத்திலும் 50 சதவீத பணியாளா்களுடன் ஏற்றுமதி நிறுவனங்கள் இயங்க அனுமதிக்க வேண்டும் என்றாா்.