மதுரையில் சனிக்கிழமை இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி கீழே விழுந்த முதியவா் உயிரிழந்தாா்.
மதுரை ஜெய்ஹிந்த்புரம் நோதாஜி தெருவைச் சோ்ந்த மாரியப்பன் மகன் பெரியசாமி (65). இவா், தனது வீட்டின் அருகே இரு சக்கர வாகனத்தில் வேகமாகச் சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்துள்ளாா். இதில் பலத்த காயமடைந்த அவரை, அப்பகுதியில் உள்ளவா்கள் மீட்டு அரசு ராஜாஜி மருத்துவமனையில் சோ்த்தனா். ஆனால், அங்கு சிகிச்சைப் பலனின்றி சிறிது நேரத்திலேயே பெரியசாமி உயிரிழந்தாா்.
இது குறித்து அவரது மனைவி செல்வலட்சுமி அளித்த புகாரின்பேரில், போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.