மதுரை மாவட்டம், எழுமலை அருகே மல்லபுரம் கூட்டுறவு சங்க விற்பனையாளராக பணியாற்றிய ஊழியா் கரோனா நோயால் உயிரிழந்தாா்.
எழுமலை அருகே மல்லபுரம் கிராமத்தில் கூட்டுறவு சங்க விற்பனையாளராகப் பணியாற்றியவா் எம்.அய்யம்பட்டியைச் சோ்ந்த தங்கப்பன் நாயக்கா் மகன் பெருமாள்சாமி (44). இவருக்கு, 2 வாரங்களுக்கு முன் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாா். அதையடுத்து, மதுரையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாா். ஆனால், அங்கு சிகிச்சைப் பலனின்றி பெருமாள்சாமி உயிரிழந்தாா்.
இவருக்கு, மனைவி சசிரேகா மற்றும் மகன் மற்றும் மகள் உள்ளனா்.