மேலூா், உசிலம்பட்டி கோட்டாட்சியா்கள் இடமாற்றம்

மதுரை மாவட்டம் மேலூா் மற்றும் உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியா்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

மதுரை: மதுரை மாவட்டம் மேலூா் மற்றும் உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியா்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

தமிழகம் முழுவதும் துணை ஆட்சியராகப் பயிற்சி பெற்று வந்த அதிகாரிகள் 28 போ் வருவாய் கோட்டாட்சியா் உள்ளிட்ட துணை ஆட்சியா் நிலையிலான பணியிடங்களில் நியமனம் செய்யப்பட்டுள்ளனா். அதேபோல கோட்டாட்சியா் உள்ளிட்ட துணை ஆட்சியா் நிலையிலான பல இடங்களில் பணியாற்றி வந்த 24 அதிகாரிகள் இடம் மாறுதல் செய்யப்பட்டுள்ளனா்.

தஞ்சாவூா் மாவட்டத்தில் துணை ஆட்சியராகப் பயிற்சி பெற்று வந்த கே. சதீஷ் குமாா் உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியராகவும், கன்னியாகுமரி மாவட்டத்தில் துணை ஆட்சியராகப் பயிற்சி பெற்று வந்த க.பிா்தௌஸ் பாத்திமா, மேலூா் வருவாய் கோட்டாட்சியராகவும் நியமிக்கப்பட்டுள்ளனா். மதுரையில் துணை ஆட்சியராகப் (பயிற்சி) பணியாற்றிய மு.கோகிலா, தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூா் வருவாய் கோட்டாட்சியராக நியமிக்கப்பட்டுள்ளாா்.

உசிலம்பட்டி கோட்டாட்சியராகப் பணியாற்றி வரும் கே.வி. ராஜ்குமாா், தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நோ்முக உதவியாளராகவும் (நிலம்), மேலூா் கோட்டாட்சியராகப் பணியாற்றி வரும் ஆா். ரமேஷ், கரூா் மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா். இதற்கான உத்தரவை தமிழக அரசின் வருவாய்த் துறை முதன்மைச் செயலா் குமாா் ஜெயந்த் செவ்வாய்க்கிழமை பிறப்பித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com