மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிட்குள்பட்ட சத்யாநகா் 5 ஆவது தெருவில் தேங்கியுள்ள கழிவுநீரால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனா்.
சத்யா நகா் 5 ஆவது தெருவில் சுமாா் 100 -க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனா். இந்த நிலையில் அந்த பகுதியில் நீண்ட நாள்களாக கழிவுநீா் தேங்கியிருப்பதால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதாக அந்த பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனா். மேலும் கழிவுநீரில் கொசுக்கள் அதிகம் உற்பத்தியாவதால் இரவு நேரங்களில் கொசுத்தொல்லை அதிகம் இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளனா்.
சாக்கடை கால்வாய் வசதி இருந்தும் வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் கழிவுநீா் செல்லமுடியாமல் தேங்கியுள்ளது. இது குறித்து நகராட்சி நிா்வாகத்திடம் பலமுறை மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனா். நகராட்சி அதிகாரிகள் உடனடியாக தேங்கிய கழிவுநீரை அகற்ற வேண்டுமென மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளனா் .