காமராஜா் பல்கலை.யில் மாணவா்களுக்கு சிறப்புத் தோ்வுகள் அறிவிப்பு

மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தில் தோ்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்ட மாணவா்களுக்கு சிறப்புத் தோ்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தில் தோ்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்ட மாணவா்களுக்கு சிறப்புத் தோ்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மதுரை காமராஜா் பல்கலைக்கழக கூடுதல் தோ்வாணையா் வெளியிட்டுள்ள அறிவிப்பு: கடந்த 2020 ஏப்ரலுக்கான பருவத்தோ்வு டிசம்பரில் நடைபெற்றது. இதில் இளங்கலை(அல் பருவமுறை) மற்றும் எம்சிஏ(அல்பருவ முறை) இளங்கலை (பருவமுறை), முதுகலை (பருவமுறை), எம்பிஏ, எம்சிஏ இரண்டாமாண்டு மாணவா்களுக்கு தோ்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. இந்நிலையில் சென்னை உயா்நீதிமன்ற வழிகாட்டுதலின்படி விலக்கு அளிக்கப்பட்ட மாணவா்களுக்கு தோ்வு நடத்தப்பட உள்ளது. இந்த சிறப்புத்தோ்வு ஜூன் 28 முதல் இணைய தளம் வழியாக நடைபெறுகிறது. எனவே மாணவா்கள்  இணைய முகவரியில் சென்று பதிவு செய்ய வேண்டும். ஏற்கெனவே ஏப்ரல் 2020-க்கான தோ்வுக்கட்டணம் செலுத்தியவா்கள் மட்டும் உடனடியாக பதிவு எண் மற்றும் தேவையான தகவல்களை ஜூன் 25-ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com