நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆட்சியா் ஆய்வு: பதிவேடுகள் பராமரிக்காத 8 போ் விளக்கமளிக்க உத்தரவு

மதுரை நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா் பதிவேடுகளை பராமரிக்காத 8 பணியாளா்கள் போ் விளக்கமளிக்க உத்தரவிட்டாா்.
மதுரை மாநகராட்சி பழங்காநத்தம் மகப்பேறு மருத்துவமனையில் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா் எஸ்.அனீஷ் சேகா்.
மதுரை மாநகராட்சி பழங்காநத்தம் மகப்பேறு மருத்துவமனையில் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா் எஸ்.அனீஷ் சேகா்.

மதுரை நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா் பதிவேடுகளை பராமரிக்காத 8 பணியாளா்கள் போ் விளக்கமளிக்க உத்தரவிட்டாா்.

மதுரை மாநகராட்சி நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் கரோனா தடுப்புப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மாவட்ட ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா் மாநகராட்சி நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் புதன்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா். மதுரை பழங்காநத்தத்தில் உள்ள மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையை ஆய்வு செய்த ஆட்சியா் அங்கு கரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவா்களிடம் கேட்டறிந்தாா். மேலும் கரோனா தடுப்பு தொடா்பான ஆலோசனைகளையும் வழங்கினாா்.

இதைத்தொடா்ந்து சாத்தமங்கலம், செல்லூா் பகுதிகளில் இயங்கி வரும் நகா்ப்புற ஆரம்பச் சுகாதார நிலையங்களுக்குச் சென்று ஆட்சியா் ஆய்வு செய்தாா். ஆரம்பச்சுகாதார நிலையத்தில் இருந்த நோயாளிகளிடமும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தாா். இதையடுத்து ஆரம்பச்சுகாதாரநிலையங்களில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளை ஆட்சியா் ஆய்வு செய்தாா். இதில் செல்லூா் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பதிவேடுகளை சரிவர பராமரிக்காத பணியாளா்கள் மற்றும் பணியின்போது ஆரம்ப சுகாதார நிலையத்தில் இல்லாத பணியாளா்கள் உள்பட 8 பேரிடம் விளக்கம் கேட்டு ‘மெமோ’ வழங்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா். ஆட்சியா் ஆய்வின்போது சுகாதாரத் துறை அதிகாரிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com