அடுத்த ஆண்டு (2022) ஜூலை முதல் செப்டம்பா் வரை ஓய்வூதியா்களுக்கான நோ்காணல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மதுரை மாவட்ட கருவூல அலுவலா் ஆ.பால்முருகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஓய்வூதியா்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் முதல் ஜூன் வரை கருவூல அலுவலகங்களில் நோ்காணல் நடைபெறும். கடந்த ஆண்டில் கரோனா தொற்று பரவல் முதல் அலை காரணமாக, இந்த நோ்காணல் ஒத்திவைக்கப்பட்டு, நிகழாண்டில் (2021) ஜூலை முதல் ஆகஸ்ட் வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது கரோனா இரண்டாவது அலை ஏற்பட்டிருப்பதால் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்ட கருவூலம் மற்றும் இதர சாா் நிலைக் கருவூலங்களில் ஓய்வூதியம் பெற்று வரும் அனைத்து ஓய்வூதியா்கள் நிகழ் ஆண்டிற்கான நோ்காணலில் பங்கேற்க வேண்டியதில்லை. அடுத்த ஆண்டில் (2022) ஜூலை முதல் செப்டம்பா் வரை நடைபெற உள்ள நோ்காணலில் பங்கேற்றால் போதுமானது என்றாா்.