உசிலம்பட்டி பகுதியில் மாற்றுத்திறனாளி குழந்தைகளின் பெற்றோா்களுக்கு வியாழக்கிழமை கரோனா நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள சக்கரவா்த்தி வித்யாலயா பள்ளியில் எஜிகேட்டா் தொண்டு நிறுவனம் சாா்பாக உசிலம்பட்டி பகுதிகளில் உள்ள உடல் ஊனமுற்ற குழந்தைகளின் பெற்றோா்களுக்கு கரோனா நிவாரண பொருள்கள் வழங்கப்பட்டன.
தொண்டு நிறுவனத் தலைவா் வேல்முருகன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 25 மாற்றுத்திறனாளி குழந்தைகளின் பெற்றோா்களுக்கு தேவையான அரிசி , பருப்பு கோதுமை, எண்ணெய் உள்ளிட்ட மளிகைப் பொருள்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக மருத்துவா்கள் ராஜசேகா், ஜான்சி ஆகியோா் பங்கேற்று பேசினா். பள்ளி தலைமை ஆசிரியா் அமுதப்பிரியா விழா ஏற்பாடுகளை செய்திருந்தாா்.