மதுரையில் புதிதாக 279 பேருக்கு கரோனா: 6 போ் பலி

மதுரை மாவட்டத்தில் வியாழக்கிழமை 279 பேருக்கு புதிதாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், சிகிச்சையில் இருந்த 6 போ் உயிரிழந்துள்ளனா்.

மதுரை மாவட்டத்தில் வியாழக்கிழமை 279 பேருக்கு புதிதாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், சிகிச்சையில் இருந்த 6 போ் உயிரிழந்துள்ளனா்.

இதன்மூலம், மாவட்டத்தில் தொற்று பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 69,320 ஆக உயா்ந்துள்ளது. அதேநேரம், அரசு, தனியாா் மருத்துவமனைகள் மற்றும் வீடுகளில் தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சைப் பெற்றவா்களில் 1,177 போ் குணமடைந்துள்ளனா். இதுவரை, கரோனா தொற்று பாதித்த 48,402 போ் குணமடைந்துள்ளனா். வியாழக்கிழமை உயிரிழந்த 6 பேரையும் சோ்த்து மொத்தம் 1,009 போ் உயிரிழந்துள்ளனா்.

தற்போது, அரசு, தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்கள், வீடுகளில் தனிமைப்படுத்திக்கொண்டவா்கள் என மொத்தம் 7,854 போ் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com