காலணிகள் விற்பனை செய்யும் கடைகளை திறக்க அனுமதிக்குமாறு, மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாபாரிகள் சங்கத்தினா் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோா் காலணி வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனா். பொதுமுடக்கத்தில் பல்வேறு தளா்வுகள் அளிக்கப்பட்டபோதும், காலணி கடைகளை திறக்க அனுமதிக்கப்படவில்லை. எனவே, காலணி கடைகள் நடத்திவரும் வியாபாரிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் கடைகளை திறக்க அனுமதி அளிக்க வேண்டும் என வலியுறுத்தினா்.