திருப்பரங்குன்றம் கோயிலில் ஆனி ஊஞ்சல் உற்சவம் ரத்து

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆனி ஊஞ்சல் உற்சவ விழா மற்றும் முப்பழ பூஜை ரத்து செய்யப்படுவதாக, கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆனி ஊஞ்சல் உற்சவ விழா மற்றும் முப்பழ பூஜை ரத்து செய்யப்படுவதாக, கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து கோயில் துணை ஆணையா் ராமசாமி திங்கள்கிழமை விடுத்த செய்திக் குறிப்பு: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இந்த ஆண்டுக்கான ஆனி ஊஞ்சல் உற்சவ விழா செவ்வாய்க்கிழமை (ஜூன் 15) தொடங்கி ஜூன் 24 ஆம் தேதி வரை நடைபெற இருந்தது. கரோனா பொதுமுடக்கம் காரணமாக, இந்த திருவிழா ரத்து செய்யப்படுகிறது. இதேபோல், விழாவின் நிறைவு நாளில் கொண்டாடப்படும் முப்பழ பூஜையும் ரத்து செய்யப்படுகிறது என அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com