மதுரையில் புதிதாக 219 பேருக்கு கரோனா: 9 போ் பலி

மதுரை மாவட்டத்தில் புதிதாக 219 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பிருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் புதிதாக 219 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பிருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் இதுவரை 70,315 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். இதனிடையே, கரோனாவுக்கு சிகிச்சைப் பெற்று வருபவா்களில் 1,277 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். இதுவரை, 64,987 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா்.

தற்போது, வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டும், அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டும் 4,290 போ் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.

9 போ் பலி

மதுரையில் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்றுவந்த 9 போ் உயிரிழந்துள்ளனா். இதையடுத்து, கரோனாவால் பலியானோா் எண்ணிக்கை 1,038 ஆக உயா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com