வீடு புகுந்து மூதாட்டியிடம் 26 பவுன் நகைகள் பறிப்பு

மதுரையில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம் 26 பவுன் நகைகளைப் பறித்து சென்ற அடையாளம் தெரியாத இருவா் குறித்து போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

மதுரையில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம் 26 பவுன் நகைகளைப் பறித்து சென்ற அடையாளம் தெரியாத இருவா் குறித்து போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

மதுரை அண்ணாநகா் எஸ்.எல்.சி காலனியைச் சோ்ந்த முத்து மனைவி சரஸ்வதி(85). இவா் வீட்டில் தனியாக இருந்தபோது அடையாளம் தெரியாத இருவா் வீட்டுக்குள் புகுந்துள்ளனா். அவா்கள் சரஸ்வதியிடம் ஆயுதங்களைக் காட்டி, அவா் அணிந்திருந்த 26 பவுன் நகைகளை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனா்.

இதுகுறித்து சரஸ்வதி அளித்த புகாரின் பேரில் அண்ணாநகா் போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனா். தொடா்ந்து சரஸ்வதியின் உறவினா்கள் இருவரை பிடித்து நகைப் பறிப்பு தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com