தமிழகத்தில் இன்று முதல் 60 வயது மேற்பட்ட முதியவர்களுக்கும், 45 முதல் 59 வயதுடைய நாள் பட்ட நோயாளிகளுக்கும் கரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.
மதுரை மாவட்டத்தில் அரசு ராஜாஜி மருத்துவமனை உள்பட 25 அரசு மருத்துவமனைகளில் இதற்கான மையங்கள் ஏற்படுத்தப்பட்டு இலவசமாக கரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
அது மட்டுமின்றி மாவட்டத்தில் 36 தனியார் மருத்தவமனைகளில் ரூ 250-க்கு தடுப்பூசி போட சுகாதாரத்துறை அனுமதி வழங்கியுள்ளது.
உரிய அடையாள அட்டை அல்லது இணையதளத்தில் பதிவு செய்த சீட்டுடன் மையங்களுக்கு வரும் முதியவர்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. நாள்பட்ட நோய் உள்ளவர்கள் உரிய ஆவணங்களுடன் வருபவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படுகிறது.
மதுரையில் தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள அரசு ஊழியர்கள் உள்ளிட்டவர்களுக்கும் கரேனா தடுப்பூசி போடப்பட்டு வருகின்றன.