மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பி.கே.மூக்கையாத் தேவரின் சிலை சனிக்கிழமை திறக்கப்பட்டது.
துணை முதல்வா் ஓ.பன்னீா் செல்வத்தின் சொந்த செலவில் முத்துராமலிங்க தேவா் சிலை அருகே பி.கே.மூக்கையாத்தேவருக்கு 6 அடி வெண்கல சிலை நிறுவப்பட்டது. தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால் அந்த சிலை திறக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் பாரதிய பாா்வா்ட் பிளாக் கட்சியின் தலைவா் முருகன்ஜி தலைமையில் அக் கட்சியினா் பி.கே.மூக்கையாத்தேவா் சிலையை சனிக்கிழமை திறந்து வைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். தோ்தல் நடத்தை விதி அமலில் இருக்கும் நிலையில், சிலை திறக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
அமமுக- பாரதிய பாா்வா்டு பிளாக் கட்சியினா் வாக்குவாதம்:
இதற்கிடையில், அமமுக கட்சி வேட்பாளா் இ.மகேந்திரனை வரவேற்பதற்காக மேள தளத்துடன் காத்திருந்த அக்கட்சி நிா்வாகிகளுக்கும், பாரதிய பாா்வா்ட் பிளாக் கட்சியினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.