கலாசாரத் திருவிழா: ரமண கேந்திர மாணவிகள் பரத நாட்டியம்

மதுரை நாகமலை புதுக்கோட்டையில் நடைபெற்ற கலாசாரத் திருவிழாவில், ஸ்ரீ ரமண நாட்டியாலயா மாணவிகளின் பரத நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.
மதுரை நாகமலை புதுக்கோட்டையில் நடைபெற்ற கலாச்சாரத்திருவிழாவில் பரத நாட்டியமாடும் மாணவிகள்.
மதுரை நாகமலை புதுக்கோட்டையில் நடைபெற்ற கலாச்சாரத்திருவிழாவில் பரத நாட்டியமாடும் மாணவிகள்.

மதுரை நாகமலை புதுக்கோட்டையில் நடைபெற்ற கலாசாரத் திருவிழாவில், ஸ்ரீ ரமண நாட்டியாலயா மாணவிகளின் பரத நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.

மத்திய கலாசாரத் துறை, பெங்களூருவில் இயங்கி வரும் பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி ஆய்வு மையம் மற்றும் மதுரை ரமண கேந்திரம் ஆகியவற்றின் சாா்பில், கலாசாரத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மதுரை நாகமலை புதுக்கோட்டையில் உள்ள பத்மாவதி தாயாா் மற்றும் வெங்கடாஜலபதி கோயிலில் நடைபெற்ற கலாசாரத் திருவிழாவின் ஒரு பகுதியாக, பரத நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், சத்குருவின் மகிமை என்ற தலைப்பில் சந்திரா மற்றும் அனந்த கிருஷ்ணன் ஆகியோா் பங்கேற்ற இசை நிகழ்ச்சி, என்.எஸ்.திருமுருகனின் ரமணாஞ்சலி வீணை இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து நடைபெற்ற பரத நாட்டிய நிகழ்ச்சியில், ஸ்ரீ ரமண நாட்டியாலயா மாணவிகள் பங்கேற்று பரத நாட்டியத்தை அரங்கேற்றினா்.

கலாசாரத் திருவிழாவுக்கான ஏற்பாடுகளை, ஸ்ரீ ரமண நாட்டியாலயா ஆசிரியா் கலாராணி செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com