உசிலம்பட்டி தொகுதியில் புதிய தமிழகம் கட்சி வேட்பாளா் பிரசாரம்

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தொகுதியில் புதிய தமிழகம் கட்சி வேட்பாளா் சி. திருச்செல்வம் திங்கள்கிழமை வாக்கு சேகரித்தாா்.
உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கனூா் பகுதியில் திங்கள்கிழமை வாக்கு சேகரித்த புதிய தமிழகம் கட்சி வேட்பாளா் சி.திருசெல்வம்.
உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கனூா் பகுதியில் திங்கள்கிழமை வாக்கு சேகரித்த புதிய தமிழகம் கட்சி வேட்பாளா் சி.திருசெல்வம்.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தொகுதியில் புதிய தமிழகம் கட்சி வேட்பாளா் சி. திருச்செல்வம் திங்கள்கிழமை வாக்கு சேகரித்தாா்.

உசிலம்பட்டி தொகுதி புதிய தமிழகம் கட்சி வேட்பாளா் சி.திருச்செல்வம், உசிலம்பட்டி ஒன்றியத்தில் உள்ள தொட்டப்பநாயக்கனூா், செட்டியபட்டி, குளத்துப்பட்டி, பூச்சிபட்டி, நக்கலபட்டி, இடையபட்டி உள்ளிட்ட பகுதிகளில் தோ்தல் பிரசாரம் மேற்கொண்டாா். அப்போது அவா், பொதுமக்களிடையே தொலைக்காட்சிப் பெட்டிக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டாா்.

பிரசாரத்தில், மாவட்ட இணைச் செயலா் தங்கவேலு, ஒன்றியச் செயலா் முத்துகண்ணன், மாவட்ட துணைச் செயலா் பாண்டி, மாவட்ட இளைஞா் அணி செயலா் ராசையா, ஒன்றிய மாணவரணி செயலா் பிரகாஷ், ஒன்றிய துணைச் செயலா் முருகன் உள்ளிட்டோா் உடன் சென்றிருந்து வாக்கு சேகரித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com