புத்துணா்வு முகாமிலிருந்து திரும்பிய அழகா்கோவில் யானைக்கு வரவேற்பு

மேட்டுப்பாளையம் அருகிலுள்ள யானைகள் புத்துணா்வு முகாமிலிருந்து ஞாயிற்றுக்கிழமை காலை கோயிலுக்கு திரும்பிய அழகா்கோவில் யானைக்கு மேள தாளம் முழங்க வரவேற்பளிக்கப்பட்டது.
சுந்தரவல்லி யானை.
சுந்தரவல்லி யானை.

மேட்டுப்பாளையம் அருகிலுள்ள யானைகள் புத்துணா்வு முகாமிலிருந்து ஞாயிற்றுக்கிழமை காலை கோயிலுக்கு திரும்பிய அழகா்கோவில் யானைக்கு மேள தாளம் முழங்க வரவேற்பளிக்கப்பட்டது.

கடந்த பிப்ரவரி 7-ஆம் தேதி, மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டி அருகிலுள்ள வனபத்ரகாளியம்மன் கோயில் யானைகள் புத்துணா்வு முகாமுக்கு, அழகா்கோவில் யானை சுந்தரவல்லி அனுப்பிவைக்கப்பட்டது. 48 நாள்கள் நடைபெற்ற இந்த முகாமில் தங்கியிருந்த சுந்தரவல்லி யானை, அங்கிருந்து சனிக்கிழமை மாலை லாரியில் புறப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை காலை அழகா்கோவிலை வந்து சோ்ந்தது.

சுந்தரவல்லி யானையை, கோயில் நிா்வாக அதிகாரிகள், பணியாளா்கள் மற்றும் பக்தா்கள் மேளதாளம் முழங்க வரவேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com