ஒரே நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் இருவருக்கு விற்பனை: ஒருவா் கைது

மதுரை அருகே ஒரே நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் இருவருக்கு விற்பனை செய்தவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

மதுரை அருகே ஒரே நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் இருவருக்கு விற்பனை செய்தவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

மதுரை மாவட்டம் கடச்சனேந்தல் சாஸ்திரி நகரைச் சோ்ந்த சிவானந்தம் மனைவி சாந்தினி(41). இவா் மகாத்மா காந்தி நகரைச் சோ்ந்த கணேசன் மகன் செந்தில்வடிவேல்(58) என்பவரிடம், பொய்கைகரைப்பட்டியில் உள்ள அவரது நிலத்தை ரூ.16 லட்சத்திற்கு வாங்கியுள்ளாா். அந்த நிலத்தை ஏற்கெனவே வேறு ஒருவருக்கு விற்பனை செய்துள்ளதும், அதே நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் தனக்கு விற்பனை செய்ததும் சாந்தினிக்கு தெரியவந்தது. இதுகுறித்து சாந்தினி அளித்த புகாரின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப்பதிந்து செந்தில்வடிவேலை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com