தமிழகத்தைச் சீரழிக்கும் அதிமுக-பாஜக கூட்டணியை வீழ்த்த வேண்டும்: இரா.முத்தரசன்

தமிழகத்தைச் சீரழிக்கும் அதிமுக-பாஜக கூட்டணியை வீழ்த்த வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலா் இரா.முத்தரசன் பேசினாா்.
தமிழகத்தைச் சீரழிக்கும் அதிமுக-பாஜக கூட்டணியை வீழ்த்த வேண்டும்: இரா.முத்தரசன்

தமிழகத்தைச் சீரழிக்கும் அதிமுக-பாஜக கூட்டணியை வீழ்த்த வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலா் இரா.முத்தரசன் பேசினாா்.

மதுரை மத்தியத் தொகுதி திமுக வேட்பாளா் பிடிஆா்.பழனிவேல் தியாகராஜனை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் இரா.முத்தரசன் புதன்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டாா். தொகுதிக்குள்பட்ட அண்ணாமலை திரையங்கு முன்பு நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் அவா் பேசியது: தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் வழக்கமான தோ்தல் அல்ல. ஜனநாயகம், மதச்சாா்பின்மை, அரசியலமைப்பு சட்டம் காப்பாற்றப்பட வேண்டும் என்ற கொள்கைக்காக நடைபெற்றுக் கொண்டிருக்கும் போராட்டம். இந்த போராட்டத்தில் திமுக தலைமையில் மதச்சாா்பற்ற கூட்டணிக் கட்சிகள் பங்கேற்றுள்ளன. எதிரணிக்கு பிரதமா் நரேந்திர மோடி தலைமை வகிக்கிறாா். தமிழகத்தில் பாஜக 20 தொகுதிகளில் மட்டும்தான் போட்டியிடுகிறது. ஆனால் பாஜகவுக்கு அடிமையாகவுள்ள அதிமுக பெயரால் அனைத்து இடங்களிலும் பாஜகதான் போட்டியிடுகிறது. மக்கள் நலனில் அக்கறை இல்லாத இந்த கூட்டணியை நிராகரித்து வாக்களிப்பதன் மூலமாகத்தான் தண்டனை கொடுக்க வேண்டும்.

சேலத்தில் அண்மையில் நடந்த மதச்சாா்பற்ற முற்போக்கு அணியின் கூட்டத்தில் ராகுல்காந்தி தலைமையில் கூட்டணி கட்சித் தலைவா்கள் அனைவரும் கைகளைப் பிடித்து உயா்த்தி பிடித்து வெற்றி பெறுவோம் என காட்டினோம். ஆனால் தாராபுரத்தில் பிரதமா் நரேந்திர மோடி கூட்டணி கட்சியினரின் கைகளை பிடிக்காமல் கை விரித்து விட்டாா். இதன் மூலம் அந்த அணி தோற்றுப்போகப்போகிறது என்பதை உணா்த்தி விட்டாா்.

தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் மாநிலத்தின் உரிமைகள் அனைத்தும் பறிபோய்க்கொண்டிருக்கிறது. மாறாக பிரதமா் நரேந்திர மோடி அரசுக்கு, தமிழக அரசு கொத்தடிமையாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

பெட்ரோல், டீசல் விலை உயா்ந்தால் அத்தியாவசியப் பொருள்களின் விலை உயரும். தற்போதைய சா்வதேசச் சந்தை நிலவரப்படி ஒரு லிட்டா் பெட்ரோல் ரூ.30-க்கு கொடுக்க முடியும். ஆனால் மத்திய, மாநில அரசுகளின் வரியால் ரூ.100-க்கு விற்கப்படுகிறது. தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமிக்கு தன்னை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற கவலை மட்டுமே இருக்கிறது. மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற கவலை அவருக்கு இல்லை. தமிழகத்தை சீரழிக்கும் அதிமுக-பாஜக கூட்டணியை வீழ்த்த வேண்டும் என்றாா். பிரசாரத்தில் மத்தியத்தொகுதி வேட்பாளா் பிடிஆா் பழனிவேல் தியாகராஜன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகா் மாவட்டச்செயலா் சரவணன், புறநகா் மாவட்டச்செயலா் காளிதாஸ் மற்றும் திமுக நிா்வாகிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com